ஆசை ஆசை....ஆசையோ ஆசை......!!!
கிருகபிரவேசம் பிரமாதமாக முடிந்தது... தம்பதிகள் நேசம் அறைகளில், பரவத்தொடங்கி பல நாள்கள் ஆகிவிட்டன... தாமதமாக வாழ்த்த வந்த விருந்தினர்களும் குறைய ஆரம்பித்தனர். ஒரு நாள் வாசப்படியில், கார் இன்சூரன்சின் விளம்பரம்... கண்ணில் பட்டது. ஈ.எம் ஐ. இருக்கே.. விண்மீன்கள் என மின்னும் கண்கள்... காரின் பல வண்ணங்கள் பார்த்து மகிழ்தார்.. எண்ணற்ற எண்ணங்கள்... ஆசை கொண்டு குதித்தது....!! போன் போட்ட தருணத்தில் டெஸ்ட் டிரைவிங்கும் ரெடி... மகிழ்ச்சி நிரம்பின சுகமான பிரயாணம்... ஆனால், ஈ.எம்.ஐ. மற்ற கட்டணம்..?? முதல்கட்டணம் இவ்வளவு ரூபாய்....??!!! குழம்பினார், திரும்பவும்.. மனதில்லாமல்..., மனக் கணக்குகள் கூட்டிக்கழித்து பார்த்தார்கள்.... நகைகளும் , காரின் ஆசைத் தராசும் , சமமாயில்லை. நடுத்தர மனிதர்களின் நகைகள் வங்கிகளில் தூங்குவது வழக்கம் தான்....!! விண்மீன்கள் திரும்புகையில் மோசம் போன ஆசையின் ஊஞ்சல் தள்ளாடி தள்ளாடி தூக்கமும்... இல்லாமல்.. பொல்லாத சிந்தனைகள் கூடுகட்டும் மனம் கடைசியில்.. கார் வேண்டாம் என்ற முடிவில் தூங்காமல்...